sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 தார்ச்சாலையாக மாறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

 தார்ச்சாலையாக மாறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

 தார்ச்சாலையாக மாறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

 தார்ச்சாலையாக மாறுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : நவ 20, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயத்தை நம்பியே உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு கிருஷ்ணசமுத்திரம் - நெட்டேரிகண்டிகை கூட்டுச்சாலை வழியாக தான் சென்றுவர வேண்டும்.

மேலும், விவசாயிகள் பயிரிடும் தானிய வகைகள், பயிருக்கு தேவையான உரங்கள் ஆகியவற்றை டிராக்டர், வேன் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இச்சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து, மண் சாலையாக மாறியுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் சகதியாக மாறி விடுகிறது.

இரு மாதங்களுக்கு முன் வேளாண் துறையின் சார்பில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் உலர் களத்துடன் கூடிய தானியங்கள் தரம் பிரிக்கும் கூடம் இச்சாலையோரம் கட்டப்பட்டது.

மண் சாலையாக உள்ளதால், இதனால், தானியங்கள் கொண்டு செல்ல விவசாயிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us