sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாழடைந்த பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்றப்படுமா?

/

பாழடைந்த பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்றப்படுமா?

பாழடைந்த பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்றப்படுமா?

பாழடைந்த பி.டி.ஓ., அலுவலக கட்டடம் அகற்றப்படுமா?


ADDED : ஜன 08, 2024 06:30 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருவாலங்காடில்பி.டி.ஓ., அலுவலகம் 1965ல் திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே கட்டப்பட்டது. இந்த கட்டடம் பழுதடைந்ததால் அதன் அருகே புதிய 2015ல் புதிய பி.டி.ஓ., அலுவலககட்டடம் கட்டப்பட்டது.

தற்போது பழைய கட்டடம் உறுதி தன்மை இழந்து கூரை சேதமடைந்ததால், அதன் அருகே இயங்கி வந்த பல் மருத்துவமனை வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.தற்போது எட்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் பலமிழந்த கட்டடம் இதுவரை அகற்றப்படவில்லை.

இந்த வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவமனை உள்ளிட்டவை உள்ளதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர்.

அதேபோன்று நாடோடி வாழ்க்கை வாழும் சிலர் ஆபத்தானபழையபி.டி.ஓ., அலுவலககட்டடத்தில் தங்கி உள்ளனர். உடைந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான கட்டடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us