sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?

/

கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?

கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?

கருவேல மரங்களை அகற்ற வனத்துறை முன்வருமா?


ADDED : ஏப் 06, 2025 03:15 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 03:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகரும்பூர் பகுதியில் இருந்து குடிநெல்வாயல் செல்லும் சாலையின் இருபுறமும், 300 ஏக்கர் பரப்பில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடு அமைந்துள்ளது. இந்த காப்பு காட்டில், அதிகளவில் கருவேல மரங்களே உள்ளன. நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் ஒன்றிரண்டே இருக்கின்றன.

வனத்துறையின் முறையான கண்காணிப்பு இல்லாமல், காப்பு காடு கருவேல மரங்களால் பொலிவிழந்து கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

வனத்துறை மரங்களை வைத்து பராமரிக்காத நிலையில், தானாக வளர்ந்த கருவேல மரங்களே இங்கு அதிகமாக உள்ளன. இவை நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும். வனப்பகுதி அருகில் பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் தண்ணீரை பயன்படுத்தி, பயன்தரும் மரங்களை வளர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us