/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'‛டி- 35' அரசு பேருந்து முறையாக இயக்கப்படுமா?
/
'‛டி- 35' அரசு பேருந்து முறையாக இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 04, 2025 10:17 PM
கும்மிடிப்பூண்டி:பொன்னேரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, தடம் எண் - 'டி 35' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஏடூர் வழியாக பல்லவாடா கிராமம் வரை நான்கு முறை, பொன்னேரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சுண்ணாம்புகுளம் வரை இரண்டு முறை என, தினசரி இயக்கப்பட்டது.
இந்த பேருந்து சேவையின் வாயிலாக, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர். கடந்த சில மாதங்களாக, இப்பேருந்து முறையாக இயக்கப்படவில்லை. புகார் அளித்தால் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறை என, பொன்னேரி பேருந்து பணிமனை சார்பில் தெரிவிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே, கிராம மக்களின் நலன் கருதி, 'டி-35' பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.