/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு தேரடி - ரயிலடி மினி பேருந்து இயக்கப்படுமா?
/
திருவாலங்காடு தேரடி - ரயிலடி மினி பேருந்து இயக்கப்படுமா?
திருவாலங்காடு தேரடி - ரயிலடி மினி பேருந்து இயக்கப்படுமா?
திருவாலங்காடு தேரடி - ரயிலடி மினி பேருந்து இயக்கப்படுமா?
ADDED : அக் 22, 2025 10:40 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு தேரடி முதல் ரயிலடி வரை, மினி பேருந்து இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களான பழையனுார், வீரராகவபுரம், புளியங்குண்டா, கூடல்வாடி, வேணுகோபாலபுரம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 50,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள், புறநகர் ரயில் வாயிலாக சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் செல்ல 5 - -10 கி.மீ.,யில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர்.
ரயில் நிலையத்திற்கு ஆட்டோ வாயிலாகவும், இருசக்கர வாகனத்தில் வருவோரிடமும் 'லிப்ட்' கேட்டு வந்து செல்கின்றனர்.
அதேபோல, ரயில் நிலையம் அருகே வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தோர், பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், மேல்நிலைப்பள்ளி மற்றும் காவல் நிலையம் செல்ல தேரடிக்கு வரவேண்டி உள்ளது.
இங்கு, போதிய பேருந்து சேவை இல்லாததால், சில ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், காலை 4:00 - இரவு 12:00 மணி வரை, திருவாலங்காடு தேரடி - -ரயிலடி வரை மினி பேருந்து இயக்க, கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.