ADDED : ஜூலை 30, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஆந்திராவில் இருந்து குட்கா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி வழியாக வந்த பெண்ணின் உடைமைகளை ஊத்துக்கோட்டை போலீசார் சோதனை செய்தனர். அதில், 15 கிலோ குட்கா இருந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம், பிச்சாட்டூரைச் சேர்ந்த முனிலட்சுமி, 55, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.