/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பெண் பலி மின் கம்பிகளை அகற்ற உறவினர்கள் மறியல்
/
உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பெண் பலி மின் கம்பிகளை அகற்ற உறவினர்கள் மறியல்
உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பெண் பலி மின் கம்பிகளை அகற்ற உறவினர்கள் மறியல்
உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து பெண் பலி மின் கம்பிகளை அகற்ற உறவினர்கள் மறியல்
ADDED : ஜன 08, 2025 12:58 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, பட்டரைப்பெரும்புதூர் ஊராட்சி, வரதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 30. இவரது மனைவி லோகேஸ்வரி, 26. இவர், நேற்று மாலை, தன் வீட்டின் மாடியில் எலுமிச்சை செடியில் காய்களை பறிப்பதற்காக சென்றார்.
அப்போது, வீட்டின் மாடி அருகே சென்ற 110 கே.வி திறன் கொண்ட மின்சாரம் பாய்ந்ததில் லோகேஸ்வரி தூக்கி வீசப்பட்டார்
இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை முற்றுகையிட்டு, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின்வாரியம் அலட்சியத்தால் பெண் பலியானதாக கூறி, உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வீட்டின் அருகே செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை அகற்றவேண்டும் எனவும், கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் டி.எஸ்.பி., லோகேஸ்வரன் தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு நடத்தினர்.
உயர் அழுத்த மின்கம்பிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.