ADDED : ஏப் 10, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலங்காரம். இவரது மனைவி சலோமி, 55. இவருக்கு இருதயம் மற்றும் கிட்னியில் பாதிப்பு இருந்ததால், சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

