ADDED : ஜன 20, 2025 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,பென்னலுார்பேட்டை அருகே, புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்.
இவரது மனைவி அஞ்சலா, 43; நேற்று முன்தினம் அஞ்சலா, உறவினர் சீனிவாசன் என்பவருடன், இருசக்கர வாகனத்தில், ஊத்துக்கோட்டை பஜாருக்கு சென்று, காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுச்சேரி கிராமம் சுடுகாடு அருகே வந்த போது, பின்னால் அமர்ந்திருந்த அஞ்சலா கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அஞ்சலா உயிரிழந்தார். பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.