sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ - வீலர் மீது லாரி மோதல் பெண் பலி; கணவர் படுகாயம்

/

டூ - வீலர் மீது லாரி மோதல் பெண் பலி; கணவர் படுகாயம்

டூ - வீலர் மீது லாரி மோதல் பெண் பலி; கணவர் படுகாயம்

டூ - வீலர் மீது லாரி மோதல் பெண் பலி; கணவர் படுகாயம்


ADDED : பிப் 05, 2025 09:41 PM

Google News

ADDED : பிப் 05, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி ஒன்றியம், சூரியநகரம் ஊராட்சி, தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார், 27; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி 24. கடந்த வாரம் ரேவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மாலை சிகிச்சை முடிந்து ரேவதி, கணவர் அருண்குமார் உடன், 'ஹூரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில் சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணி நோக்கி வந்தனர்.

கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி, அருண்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார். கணவர் அருண்குமார் படுகாயம் அடைந்தார்.

கனகம்மாசத்திரம் போலீசார், ரேவதி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அருண்குமார் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார், விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சென்ராயன், 36, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us