sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்

/

பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்

பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்

பெருகி வரும் 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களால்...கடனாளியாகும் மகளிர்

1


UPDATED : ஏப் 21, 2025 08:33 AM

ADDED : ஏப் 20, 2025 08:44 PM

Google News

UPDATED : ஏப் 21, 2025 08:33 AM ADDED : ஏப் 20, 2025 08:44 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:மாவட்டத்தில் 'மைக்ரோ, ஸ்மால் பைனான்ஸ்' நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை அணுகி, கடன் வலையில் வீழ்த்துவது பெருகி வருகிறது. இதனால், மகளிர் கடனாளிகளாகி வருவதாகவும், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் திட்டம் செயல்படுகிறது. 1989ல் தர்மபுரி மாவட்டத்தில், பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி நிறுவன உதவியுடன், மகளிர் சுய உதவிக்குழு அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது.

ஒரே பகுதியைச் சேர்ந்த 18 - 60 வயதிற்கு உட்பட்ட 12 - 20 வரையிலான எண்ணிக்கையில் மகளிரை குழுவாக கொண்ட சுய உதவிக்குழுக்களாக வளர்ந்துள்ளன. சமூக, பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி மகளிரின் திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் வாய்ப்புகள், கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து அரசு, வங்கி, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது.

தற்போது, தமிழகம் முழுதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதன் வாயிலாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் என, பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரமாக, பெரும்பாலான இடங்களில், இக்குழுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர் உட்பட 14 ஒன்றியங்களில், 20,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன.

ஊராட்சி, வட்டார, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளையும் அரசு ஏற்படுத்தி கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட 'மைக்ரோ, ஸ்மால் பைனான்ஸ்' நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களை மையமாக வைத்து, உடனடி கடன் வழங்கி வருகின்றன. பணம் விரைவாக கிடைப்பதால், பல்வேறு பகுதிகளிலும் மகளிர் குழுவினர் 'பைனான்ஸ்' முறையில் கடன் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்கள், சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடன் பெறும் பல மகளிர் குழுவினர், பெரும்பாலும் சுயதொழில் செய்வது இல்லை. பிற செலவினங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துகின்றனர்.

இதனால், பலர் வாங்கிய கடனை முறையாக செலுத்த வேறு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுவாக கடன் வாங்க, ஒருவர் விண்ணப்பிக்கும் போது, வங்கி 'சிபில் ஸ்கோர்' என்கிற நடைமுறையை வைத்து கடன் வழங்கப்படுகிறது.

ஆனால், 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்கள், இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் தாராளமாக கடன் வழங்கி, மகளிரை கடனாளியாக்கி வருகின்றனர்.

கடன் சூழலில் சிக்குகிறோம்


பைனான்ஸ் நிறுவனங்களில் உள்ள மேனேஜர் மற்றும் ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழு தலைவரை அணுகுகின்றனர். விரைவாக கடன் வழங்குவதால், அதை பெற குழு உறுப்பினர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் வட்டியுடன், 1.40 லட்சம் வரை கட்டுவதாக கூறுகின்றனர். மாதம் 3,000 - 5,000 ரூபாய் வரை, ஐந்து ஆண்டுகள் வரை கட்டுகின்றனர். தவணை தவறினால், அதற்கு தனி வட்டியும் விதிக்கப்படுகிறது. இதனால், பலர் கடன் சூழலில் சிக்குவதால், குடும்பத்தில் பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. 'மகளிர் குழுக்களை சிக்க வைக்கும் இத்தகைய 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எல்.வேதவள்ளி,கனகம்மாசத்திரம்.



குளறுபடிகளை களைய வேண்டும்


தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், இதுபோன்ற உடனடி கடன்கள் வழங்காத போதும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான மகளிர் குழுவினருக்கு கடன்களை வழங்குகின்றன. இதனால், கடன் தொகை கட்ட முடியாமல் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. மேலும், கடன் வழங்கியவர்கள் ஆபாசமாக வசைப்பாடுவது கிராமங்களில் தொடர்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகம், இத்தகைய நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தி, மகளிர் குழுவினர் பாதிக்காத வகையில் முறைப்படுத்த வேண்டும். இதில், நடக்கும் குளறுபடிகளை களைய மகளிர் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-
ஆர்.நவீன்குமார்,சமூக ஆர்வலர்,திருவாலங்காடு.



மகளிர் குழுக்கள் ஏமாற வேண்டாம்


மகளிர் குழுக்களை ஆறு மாதம் காண்காணித்த பின்பு தான், கடனுதவி பெற வங்கிகளுக்கு நாங்கள் பரிந்துரை செய்வோம். அதன்பின், வங்கிகள் மற்ற நடைமுறைகளை பின்பற்றுவது வழக்கம். ஆனால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை. இதனால், மகளிர் குழுக்கள் அவர்களிடம் கடன் பெற்று சிக்கலுக்கு உண்டாகும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களை அவர்கள் அணுகாமல், அதிகாரிகளிடம் ஆலோசனை பெறலாம். இதற்கான விழிப்புணர்வை, நாங்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.
- மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி,திருவள்ளூர்.








      Dinamalar
      Follow us