sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்

/

 சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்

 சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்

 சிப்காட்டிற்கு பஸ் வசதியின்றி பெண் தொழிலாளர்கள் சிரமம்


ADDED : நவ 23, 2025 03:05 AM

Google News

ADDED : நவ 23, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதியின்றி, பெண் தொழிலாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில், ஒப்பந்த அடிப்படையில், 4,000 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

சிலர் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ, லாரி என, கிடைக்கும் வாகனங்களில் பணிக்கு வந்து செல்கின்றனர்.

ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை பயணிப்பதால், தினமும் மிக பெரிய சவாலுக்கு இடையே பணிக்கு சென்றுவர வேண்டிய நிலையில் உள்ளனர்.

குடும்ப சுமையை சமாளிக்க வேறு வழி தெரியாமல், ஆபத்தாக பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.

பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பெண் தொழிலாளர்களுக்கு சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து, பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us