sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு

/

கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு

கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு

கும்மிடியில் பேருந்து வசதியின்றி பெண் தொழிலாளர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 03, 2025 02:46 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில், 4,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் சிலர் அருகில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெண் தொழிலாளர்கள், கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ, லாரி என, கிடைக்கின்ற வாகனங்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். பெண் தொழிலாளர்களின் பிரதான போக்குவரத்து வாகனமாக இருப்பது ஷேர் ஆட்டோக்கள் மட்டுமே.

ஒரு ஷேர் ஆட்டோவில் குறைந்தது, 20 பெண்கள் வரை பயணிப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடும்ப சுமையை சமாளிக்க வேறு வழியில்லாமல், ஆபத்தாக பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, பெண்களுக்கான இலவச பேருந்து வசதியை வழங்கிய தமிழக அரசு, கும்மிடிப்பூண்டி பெண் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us