ADDED : ஜன 31, 2026 06:24 AM
திருவள்ளூர்: உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 'ஸ்பர்ஷ்' தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, 35 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 250 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்போது, 155 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். கடந்தாண்டு, 57 நோயாளிகள் தொழுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிறப்பு பிரிவு துவக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி முதல்வர் மோகன் காந்தி, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

