நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் காப்பு காடு பகுதியில் இருந்து, மூன்று வயதுடைய மான் வழித்தவறி சின்னம்மாபேட்டை பஜார் பகுதிக்கு, நேற்று மாலை 6:10 மணிக்கு வந்தது.
இந்த மானை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் துரத்தியதில் விழுந்து காயமடைந்தது. தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு போலீசார், மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, திருத்தணி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.