sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பட்டாவில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க 'இ- சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்

/

பட்டாவில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க 'இ- சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டாவில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க 'இ- சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பட்டாவில் வாரிசுதாரர் பெயர் சேர்க்க 'இ- சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 15, 2025 06:54 PM

Google News

ADDED : மே 15, 2025 06:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்த நில உடமைதாரர் பெயர்களை நீக்கி, வாரிசுதாரர் பெயர் சேர்க்க 'இ சேவை' மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதுமுள்ள கிராம மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதள சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும், பல பட்டாக்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், அவர்களின் வாரிசுதாரர்களான தற்போதைய உரிமையாளர்களின் பெயர் சேர்க்கப்படாமலும் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர் பெயரை நீக்கி, அவர்களது வாரிசுதாரர் பெயரை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் 'இ-- சேவை' மையங்களின் விண்ணப்பிக்கலாம். அல்லது 'சிட்டிசன் போர்ட்டல்' வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரர் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us