ADDED : அக் 11, 2025 08:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொல்லகுப்பத்தைச் சேர்ந்த தேவா, 24, என்பவரிடம், காதலுக்கு உதவி செய்யுமாறு சிறுமி கேட்டுள்ளார்.
இதை பயன்படுத்தி கொண்ட தேவா, சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமி அளித்த புகாரின்படி, திருத்தணி மகளிர் காவல் நிலைய போலீசார், தேவாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.