ADDED : ஜூன் 09, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை,
ஆரணியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் சுற்றித் திரிந்தார்.
விசாரணையில் அவர் விழுப்புரம் தாலுகா, அப்துல்கலாம், 21, என்பது தெரிந்தது. அவரிடம் இருந்த 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.