ADDED : ஜன 27, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,
சென்னை- - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து, அலுமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார், வாலிபர் உடலை மீட்டு, வழக்கு பதிந்து, இறந்தவரின் பெயர், விலாசம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

