ADDED : அக் 29, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: மளிகை கடையின் ஷட்டரை மூடும்போது, மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.
பொன்னேரி, கெங்குசாமி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தனராம் மகன் பரத், 18. இவர், பொன்னேரி தேரடி தெருவில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, விற்பனை முடிந்து கடையை மூடுவதற்காக, அங்குள்ள இரும்பு ஷட்டரை பரத் கீழே இறக்கினார்.
அப்போது, ஷட்டரின் ஒருபகுதி அருகில் இருந்த மின்சாதன பெட்டியில் சிக்கியது. அதன் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், பரத் துாக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே, பரத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

