sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி

/

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி


ADDED : அக் 06, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் நைனாமுகமது.

இவரது மகன் ரியான் அகமது, 29. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார்.

சிறிது காலம் குடிப்பழக்கத்தை நிறுத்தியவர், மீண்டும் குடிக்கு அடிமையானார். இதனால், பெரியபாளையம் அடுத்த வடமதுரை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us