/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம்பெண் தற்கொலைஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஆக 12, 2011 01:32 AM
மன்னார்குடி: நீடாமங்கலம் அடுத்த கட்டையடி கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கட்டையடி கிராமம் மேலத்தெருவில் வசிப்பவர் தமிழார்வன் (42). கூலி தொழிலாளர். இவரது மகள் கீதா (18). இவரும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தன் (20). கடந்த ஆறு மாதங்களுக்கு முன் காதலித்து திருணம் செய்து உள்ளனர். இந்நிலையில் ஒரு வார காலமாக மாமனார் கோவிந்தராஜு, கணவர் ஆனந்தன் இருவரும் சேர்ந்து கீதாவை அடித்து உதைத்து நகை, பணம் வரதட்சனையாக வாங்கி வர சொல்லி துன்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த மண்ணெண்öணையை தனது உடலில் ஊற்றி தீ குளித்தார். உயிருக்கு போராடிய நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கீதா இறந்தார். இது குறித்து கீதாவின் தந்தை தமிழார்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நீடாமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். திருமணமாகி ஆறு மாதமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ., செல்வராஜு விசாரிக்கின்றார்.

