ADDED : நவ 02, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: திருவாரூரை சேர்ந்த ரமேஷ் மகன் அபினேஷ்வரன், 20. இவர்கள் உறவினர் இலவங்கார்குடியை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் தினேஷ், 16; பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அபினேஷ்வரன், தினேஷ் கமலாபுரம் சென்று விட்டு, திருவாரூர் நோக்கி டூ-வீல ரில் வந்து கொண்டிருந்தனர்.
திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற டாடா ஏஸ் வாகனமும், டூ --- வீலரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அபினேஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த தினேஷ், அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
திருவாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

