/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
/
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
ADDED : நவ 19, 2025 06:23 AM

திருவாரூர்: போக்சோ வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு, திருவாரூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வேளூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வந்தார்.
அவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம், 30, என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் 2017 ஆக., 5ல் மாணவி கர்ப்பமடைந்தார். பின், இருவருக்கும், செல்வம் உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
புகாரில், திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனில், செல்வம் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. வழக்கு பதிவு செய்த சப் - இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், தற்போது, சீர்காழியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில், சாட்சி கூற, கமல்ராஜுக்கு, 15 முறை சம்மன் அனுப்பியும், அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதையடுத்து, நீதிபதி சரத்ராஜ், ஆஜராகாத கமல்ராஜுக்கு, நேற்று, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

