/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை
/
கிண்டல் செய்த தகராறில் வாலிபர் அடித்து கொலை
ADDED : அக் 20, 2025 12:57 AM
திருவாரூர்: கிண்டல், கேலி பேசிய தகராறில், வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகே புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் மணிகண்டன், 30; திருமணமாகாதவர். அதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. இவரை, நேற்று மதியம், மணிகண்டன் கிண்டல் செய்துள்ளார். இதில், வெங்கடேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று மாலை, 5:30 மணிக்கு, மணிகண்டன் வீட்டிற்கு, வெங்கடேஷ் சென்றுள்ளார். அங்கு, மணிகண்டன் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, மணிகண்டனை, கட்டையால் தாக்கியதில், அவர், அதே இடத்தில் இறந்தார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
திருவாரூர் தாலுகா போலீசார், வெங்கடேஷை கைது செய்து விசாரிக்கின்றனர்.