sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

/

போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை

போக்சோவில் வாலிபருக்கு 40 ஆண்டு சிறை


ADDED : ஜன 10, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, கோட்டூர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பக்ருதீன்.

இவரது மகன் அசார் என்கிற ஜெகபர்சாதிக், 25. இவர், ராயநல்லுாரைச் சேர்ந்த சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கடந்த 2020ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், திருத்துறைப்பூண்டி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போக்சோ வழக்கில் அசாரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அசாருக்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us