sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவாரூர்

/

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

/

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது


ADDED : ஏப் 04, 2025 02:27 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாரூர்:சக ஊழியர் சம்பள நிலுவையை பெற்றுத்தர, 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவில் செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ் வரர் கோவில் செயல் அலுவலர் ஜோதி, 42. இவர், மன்னார்குடி, ஆனந்த விநாயகர் கோவில் பொறுப்பு செயல் அலுவலராக உள்ளார்.

திருக்கொள்ளிக்காடு கோவில் எழுத்தர் சசிகுமார், 49. இவருக்கு சம்பள நிலுவைத்தொகை, 2 லட்சம் ரூபாய் வர வேண்டியிருந்தது. இந்த தொகையை பெற்றுத்தர, சசிகுமாரிடம் 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக ஜோதி கேட்டுள்ளார். இதற்கு, அவர் சம்மதித்துள்ளார்.

அரசுக்கு கோப்புகளை அனுப்பி, 2 லட்சம் ரூபாயை சசிகுமார் பெற்றுள்ளார். பணம் வந்தவுடன், 1 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை ஜோதி கேட்டுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத சசிகுமார், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று ரசாயன பவுடர் தடவிய, 1 லட்சம் ரூபாயை, மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோவிலில் ஜோதி பெற்ற போது, டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையிலான போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.






      Dinamalar
      Follow us