sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்

/

ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்

ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்

ஸ்ரீவை., அணையிலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும்


ADDED : ஆக 19, 2011 05:32 AM

Google News

ADDED : ஆக 19, 2011 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவைகுண்டம்:ஸ்ரீவை., அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும் என ஸ்ரீவை., வடகால் பாசன சங்க போராட்ட குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவை.,யில் நடந்த கூட்டத்திற்கு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.



கூட்டத்தில் தண்ணீர் இன்றி வாடும் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வேண்டியும், விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காமல் தொழிற்சாலைகளுக்கு அணையிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி செல்வதை கண்டித்தும், வல்லநாடு பகுதியில் அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்கவும், வாய்க்கால் ஆறுகளில் உள்ள அமலை செடிகளை அகற்றிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுப்தை தடுக்க மக்களை திரட்டி விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.



கூட்டத்தில் தனுஷ்கோடி, தனசீலன், பொன்ராஜ், குலையன்கரிசல் கருத்தையா, கூட்டாம்புளி பட்டுமுருகேஷ், மாரமங்கலம் தீப்பாச்சி லட்சுமணன், முத்துராமன், பார்த்திபன், சண்முகசுந்தரம், உமரிக்காடு முருகேசன், ராமலிங்க விஜயன், அகரம் வேல்சுப்பிரமணியன், பழையகாயல் கண்ணன், விவேகானந்தன், மஞ்சள்நீர்காயல் பாலையா, ராமச்சந்திரன், முக்காணி ஆறுமுகம் சின்னதம்பி, இசக்கி, பார்வதிபாண்டியன், கனகராஜ் சீனிவாசன், அசோகன், பூவலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us