sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி

/

வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி

வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி

வெறிநாய்கள் கடித்ததில் 22 ஆடுகள் பரிதாப பலி


ADDED : மே 25, 2024 02:12 AM

Google News

ADDED : மே 25, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள அரசன்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரின் மகன்கள் முருகன், சுப்புராஜ் ஆகிய இருவரும் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இருவருக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இவர்களது ஆட்டு தொழுவில் புகுந்து 22 ஆடுகள் மற்றும் குட்டிகளை கடித்துள்ளது. இதில், 22 ஆடுகளும் உயிரிழந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:

அரசன்குளம் கிராமத்தில் 60 சதவித மக்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறோம். 30,000த்துக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. வழக்கமாக வெறிநாய்கள் ஒரு சில ஆடுகளை கடித்துவிட்டு வெறிநாய்கள் ஓடிவிடும். ஆனால், தற்போது 22 ஆடுகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. வெறி நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us