/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கும் இலங்கையில் 20 வரை கோர்ட் காவல்
/
துாத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கும் இலங்கையில் 20 வரை கோர்ட் காவல்
துாத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கும் இலங்கையில் 20 வரை கோர்ட் காவல்
துாத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கும் இலங்கையில் 20 வரை கோர்ட் காவல்
ADDED : ஆக 07, 2024 10:01 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, 45, என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 மீனவர்கள், ஜூலை 21ம் தேதியும், மைக்கேல் தேன் தெனிலா, 43, என்பவருக்கு சொந்தமான படகில் 10 மீனவர்கள், ஜூலை 23ம் தேதியும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கடந்த 5ம் தேதி அவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் இரு படகுகளிலும் இருந்த 22 பேரையும் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 22 மீனவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின், கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இஓனா விமலரத்ன, 22 மீனவர்களையும், வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, 22 மீனவர்களும் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.