நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி தாளமுத்துநகர் கணேசன் வீட்டில் உள்ள உறை கிணறு நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் துர்நாற்றம் வீசியது.
ஆக., 4 ல் அதில் இருந்த தண்ணீரை கணேசன் வெளியேற்றினார். அப்போது வாளி தவறுதலாக கிணற்றில் விழுந்தது. அதனை எடுக்க கணேசன் கிணற்றில் இறங்கினார். விஷவாயு தாக்கியதில் கணேசன், அவரை மீட்க சென்ற அவரது நண்பர் மாரிமுத்து ஆகியோர் இறந்தனர்.
இச்சம்பவத்தில் அவர்களை காப்பாற்ற முயன்ற போது விஷவாயு தாக்கிய பவித்ரன் மற்றும் ஜேசுராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் ஜேசுராஜ் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.