/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆசிரியர் வீட்டில் 30 சவரன் திருட்டு
/
ஆசிரியர் வீட்டில் 30 சவரன் திருட்டு
ADDED : மே 26, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதுாரைச் சேர்ந்தவர் மணி. ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மல்லிகா, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை. இவர்களது மகள் மேலானி, கோவையில் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்லுாரியில் படிக்கிறார்.
மணியும், மல்லிகாவும் மகளைப் பார்க்க ஒரு வாரம் முன் கோவை சென்றுள்ளனர். நேற்று காலையில் மணி வீட்டு பணிப்பெண் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு பீரோவில் இருந்து 30 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. நாலாட்டின்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.