sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி

/

டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி

டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி

டூ - வீலர் ஓட்டிய சிறுவன் 6ம் வகுப்பு மாணவர் பலி


ADDED : ஆக 27, 2024 04:18 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், தெற்கு நல்லுாரை சேர்ந்த கண்ணம்மா மகன் சக்திராஜா, 14. ஆறுமுகநேரி அருகேயுள்ள பேயன்விளை பள்ளியில் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த நிலையில், தற்போது பள்ளி செல்லாமல் வீட்டில் இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஸ்வின், 13.

இவர், வரண்டியவேல் அகோபாலபுரம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், ஹெல்மெட் அணியாமல், குரும்பூருக்கு டூ - வீலரில் சென்று, நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சக்திராஜா டூ - வீலரை ஓட்டினார். குரும்பூர் பஜாரில் சென்றபோது, நெல்லையிலிருந்து திருச்செந்துார் நோக்கி சென்ற லாரி, டூ - வீலர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மாணவர் அஸ்வின் உயிரிழந்தார். காயமடைந்த சக்திராஜா துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குரும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

துாத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த லாரி டிரைவர் மணிராஜ், 45, என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us