/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பாத்திர கடையில் பொருள் வாங்குவது போல் வந்து ரூ 10 ஆயிரம் அபேஸ் * பைக்கில் வந்த நபர் கைவரிசை
/
பாத்திர கடையில் பொருள் வாங்குவது போல் வந்து ரூ 10 ஆயிரம் அபேஸ் * பைக்கில் வந்த நபர் கைவரிசை
பாத்திர கடையில் பொருள் வாங்குவது போல் வந்து ரூ 10 ஆயிரம் அபேஸ் * பைக்கில் வந்த நபர் கைவரிசை
பாத்திர கடையில் பொருள் வாங்குவது போல் வந்து ரூ 10 ஆயிரம் அபேஸ் * பைக்கில் வந்த நபர் கைவரிசை
ADDED : ஆக 03, 2024 12:14 AM
பேய்க்குளம்:பேய்க்குளம் பாத்திர கடையில் டிபன் பாக்ஸ் வாங்குவது போல் வந்து ரூ10 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே சாலைப்புதுாரைச் சேர்ந்தவர் கோயில்ராஜ். இவர் பேய்க்குளம் டூ கோமானேரி ரோட்டில் பாத்திர கடை நடத்தி வருகிறார். கடந்த 29
ம் தேதி காலையில் கடையை திறந்த போது, கடைக்கு பைக்கில் ஒரு நபர் வந்துள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்த அந்த நபர் டிபன் பாக்ஸ் கேட்டுள்ளார். அவர் டிபன் பாக்ஸை எடுக்க முயன்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ10 ஆயிரத்தை எடுத்து விட்டு பைக்கில் தலைமறைவானார்.
டிபன் பாக்ஸை எடுத்து வந்த பார்த்த கோயில்ராஜ், அந்த மர்மநபர் மாயமானார். அவரை தேடியபோது பணப்பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. அவர் பேய்க்குளம் பஜாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தபோது பைக்கில் மர்மநபர் ஹெல்மெட் அணிந்து வேகமாக செல்வது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.