sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

/

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு


ADDED : ஜூன் 13, 2024 02:12 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி,:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. அவரது மகன்களான ஆனந்த பத்மநாபன், ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன், அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, 16வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. ஜூன் 19ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஐயப்பன் ஒத்திவைத்தார். அன்றையதினம், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us