/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி
/
ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி
ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி
ஆலையில் அமோனியா வாயு கசிவு துாத்துக்குடியில் ஒருவர் பலி
ADDED : ஆக 31, 2024 01:58 AM

தூத்துக்குடி : தூத்துக்குடி டாக் ரசாயன தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர் ஒருவர் பலியானார். 4 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஸ்பிக் உர ஆலையின் துணை நிறுவனமான டாக் கெமிக்கல் பெர்டிலைசர்ஸ் ஆலை உள்ளது. அங்கு நூற்றுக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். நேற்று மதியம் 3:15 மணிக்கு அமோனியா பைப் லைன் கசிவை சரி செய்ய முயன்ற போது வாயு பட்டதில் ஊழியர் சாயர்புரம் அருகே மஞ்சள் நீர் காயல் ஆனந்தகிருஷ்ணன் மகன் ஹரிஹரன் 24, பலியானார். மேலும் தூத்துக்குடி தனராஜ் 37, திருப்பூர் மாரிமுத்து 24, உள்ளிட்ட நான்கு பேர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முத்தையாபுரம் போலீசார் விசாரித்தனர்.