/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு
/
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 23, 2024 02:18 AM
துாத்துக்குடி:தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று யாரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணயை மார்ச் 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.
இதுதொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், அமலாக்க துறையினர் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை; லஞ்ச ஒழிப்பு போலீசார் மட்டுமே ஆஜராகினர்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.

