sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு

/

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை மார்ச் 26-க்கு ஒத்திவைப்பு


ADDED : மார் 23, 2024 02:18 AM

Google News

ADDED : மார் 23, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று யாரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணயை மார்ச் 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பிலும், அமலாக்க துறையினர் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை; லஞ்ச ஒழிப்பு போலீசார் மட்டுமே ஆஜராகினர்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us