sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

மறு ஓட்டு எண்ணிக்கையிலும் குழப்பமான பஞ்சாயத்து தேர்தல்

/

மறு ஓட்டு எண்ணிக்கையிலும் குழப்பமான பஞ்சாயத்து தேர்தல்

மறு ஓட்டு எண்ணிக்கையிலும் குழப்பமான பஞ்சாயத்து தேர்தல்

மறு ஓட்டு எண்ணிக்கையிலும் குழப்பமான பஞ்சாயத்து தேர்தல்


ADDED : ஜூன் 14, 2024 02:42 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் யூனியனுக்குட்பட்ட காயாமொழி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரன் 1,071 ஓட்டுகளும், முரளிமனோகர் 1,070 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது, முறைகேடு நடந்ததாக முரளிமனோகர் தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோர்ட் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து, பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜேஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

திருச்செந்துார் யூனியன் அலுவலகத்தில் காயாமொழி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் தேர்தலுக்கான மறு ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. முடிவில், ராஜேஸ்வரன் 1069 ஓட்டுகளும், முரளி மனோகர் 1068 ஓட்டுகளும் பெற்றனர். 105 ஓட்டுகள் செல்லாதவை. ராஜேஸ்வரன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மறு ஓட்டு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததாக முரளி மனோகர் தரப்பினர் நேற்று தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

கடந்த முறை ஓட்டு எண்ணிக்கையின்போது 100 ஓட்டுகள் செல்லாதவை எனக் கூறினர். தற்போது, அதில் 5 ஓட்டுகள் கூடியுள்ளது. வேண்டும் என்றே முரளிமனோகருக்கு கிடைத்த ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us