sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

தி.மு.க.,- எம்.எல்.ஏ., சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

/

தி.மு.க.,- எம்.எல்.ஏ., சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

தி.மு.க.,- எம்.எல்.ஏ., சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

தி.மு.க.,- எம்.எல்.ஏ., சகோதரர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 04, 2025 03:21 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, தாப்பாத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 46. ஓட்டப்பிடாரம், சிலோன் காலனியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம், 'அமோசா' சோலார் நிறுவனத்திற்கு சொந்தமானது எனக்கூறி சிலர் அளவீடு செய்துள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்த மாரிமுத்துவை தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அமோசா சோலார் நிறுவனத்திற்கு நிலத்தை கொடுக்காவிட்டால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மாரிமுத்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், தி.மு.க.,வை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சண்முகையாவின் சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன், 61, சென்னை, ஆவடியை சேர்ந்த அமோசா சோலார் நிறுவன மேலாளர் சீனிவாசன், 43, ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த துரை, 42, தினேஷ்குமார், 38, சிவகாசியை சேர்ந்த கணேஷ், 39 உட்பட 8 பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

ஆயுதம் ஏந்தி தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல், அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தல், சட்டவிரோதமாக செயல்படுதல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us