sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்

/

பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்

பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்

பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்


ADDED : ஆக 11, 2024 11:43 PM

Google News

ADDED : ஆக 11, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : துாத்துக்குடி, வேதாரண்யத்திற்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளது. இந்த பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக, 3,500 ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இங்கிருந்து ஆண்டுக்கு, 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி அக்டோபர் மாதம் முடியும்.

இந்தாண்டு மழை குறுக்கிட்டதால், உப்பு உற்பத்தி தடைபட்டு வந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரு தினங்களாக பெய்த கனமழையால் பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்படும் என, உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us