sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

வழக்கறிஞர் வெட்டிக்கொலை சகோதரி கணவர், 5 பேர் கைது

/

வழக்கறிஞர் வெட்டிக்கொலை சகோதரி கணவர், 5 பேர் கைது

வழக்கறிஞர் வெட்டிக்கொலை சகோதரி கணவர், 5 பேர் கைது

வழக்கறிஞர் வெட்டிக்கொலை சகோதரி கணவர், 5 பேர் கைது


ADDED : மே 13, 2024 06:57 AM

Google News

ADDED : மே 13, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி, அண்ணா நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம், 32; வழக்கறிஞர். இவர், அண்ணா நகர் மெயின் ரோட்டில் ஏ.இ.எம்., என்ற பெயரில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல, மெடிக்கலை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் இரவு, செந்தில் ஆறுமுகம் தன் டூ - வீலரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கும்பல் திடீரென செந்தில் ஆறுமுகத்தை மறித்து அரிவாளால் வெட்டினர். அவர் தப்பியோட முயன்ற போதிலும், அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தென்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செந்தில் ஆறுமுகம் கொலை தொடர்பாக, அவரது சகோதரியின் கணவரான கோவில்பட்டி நாலாட்டின்புதுாரைச் சேர்ந்த கோபிநாத், 37, உட்பட ஆறு பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட செந்தில் ஆறுமுகத்தின் தாய், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரது பெயரில் இருந்த இடத்தில் செந்தில் ஆறுமுகம் தனியாக கட்டடம் கட்ட முயன்றார். அதில், அவரது அக்கா விக்னேஷ்வரிக்கும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விக்னேஷ்வரியின் கணவர் கோபிநாத், கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து செந்தில் ஆறுமுகத்தை கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us