sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

ஓராண்டில் பழுதான காரை புதிதாக மாற்றித்தர உத்தரவு

/

ஓராண்டில் பழுதான காரை புதிதாக மாற்றித்தர உத்தரவு

ஓராண்டில் பழுதான காரை புதிதாக மாற்றித்தர உத்தரவு

ஓராண்டில் பழுதான காரை புதிதாக மாற்றித்தர உத்தரவு


ADDED : ஆக 01, 2024 10:53 PM

Google News

ADDED : ஆக 01, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தைச் சேர்ந்த மணி பாலகுமார், 41, திருநெல்வேலி பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூமில் புதிய கார் வாங்கியுள்ளார். சில மாதங்களுக்கு பின்னர் சர்வீஸ் செய்த நிலையில், இஞ்சின் ஆயில் அளவைக் காட்டும் பகுதியில் எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது.

இது குறித்து கார் விற்பனையாளரிடம் கேட்டதற்கு, அது தானாகவே அணைந்து விடும் எனக், கூறியுள்ளனர். ஆனால், திடீரென காரின் இன்ஜின் முழுமையாக பழுதாகி நின்று விட்டது. வாங்கிய ஓராண்டிற்குள் முற்றிலும் பழுதானதால் புதிய கார் தருமாறு ஷோரூமில் மணி பாலகுமார் கேட்டுள்ளார்.

கார் விற்பனையாளர் அதற்கு சம்மதிக்காததால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

பழுதான காருக்கு பதில் புதிய கார் அல்லது கார் விலையான, 12 லட்சம் ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு, 50,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் ஆகியவற்றை இரு மாதங்களுக்குள் வழங்க, அவர்கள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us