sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

/

காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்

காலாவதியான தேன் விற்ற கடைக்காரருக்கு அபராதம்


ADDED : மே 07, 2024 11:01 PM

Google News

ADDED : மே 07, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கடையில், பாட்டில் தேன் வாங்கினார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அது காலாவதியானது என தெரிந்தது. காலாவதியான தேதியில் இருந்து, ஒரு மாதம் 12 நாட்கள் கடந்து, கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

கடைக்காரரிடம் சென்று மாற்றுப் பொருள் தருமாறு சுப்பிரமணி கேட்டார். கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன், சுப்பிரமணியை உதாசினப்படுத்தினார்.

இதுகுறித்து, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுப்பிரமணி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீலபிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர், 'தேன் பாட்டில் விலையான 160 ரூபாய், சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு 5,000 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 5,000 ரூபாய் என மொத்தம் 10,160 ரூபாயை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us