sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சிறையில் கைதிகள் மோதல்; 9 பேர் காயம்; டி.ஐ.ஜி., ஆய்வு

/

சிறையில் கைதிகள் மோதல்; 9 பேர் காயம்; டி.ஐ.ஜி., ஆய்வு

சிறையில் கைதிகள் மோதல்; 9 பேர் காயம்; டி.ஐ.ஜி., ஆய்வு

சிறையில் கைதிகள் மோதல்; 9 பேர் காயம்; டி.ஐ.ஜி., ஆய்வு


ADDED : செப் 08, 2024 11:27 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில், நான்கு பிளாக்குகளில் விசாரணை கைதிகள், 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சந்தனக்குமார், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு திடீரென தகராறு ஏற்பட்டது.

யார், எங்கு படுப்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில், ஒன்பது பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சிறைக்காவலர்கள் கதவை திறந்ததும், அங்கிருந்த கைதிகள் நாலாபக்கமும் ஓடியதால் தகராறில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது.

சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன், மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி., சுகிர் ஆகியோர் விசாரித்தனர். சிறிது நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்த மோதல் தொடர்பாக, சிறைத்துறை டி.ஐ.ஜி., பழனி, துாத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us