sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துாரில் ஆவணி தேரோட்டம் விமரிசை

/

திருச்செந்துாரில் ஆவணி தேரோட்டம் விமரிசை

திருச்செந்துாரில் ஆவணி தேரோட்டம் விமரிசை

திருச்செந்துாரில் ஆவணி தேரோட்டம் விமரிசை


ADDED : செப் 02, 2024 11:03 PM

Google News

ADDED : செப் 02, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா ஆக.,24 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 5ம் திருவிழாவன்று இரவு குடவரைவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ம் திருவிழா நண்பகல் பச்சை சாத்திக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு வீதி உலா வந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளியம்மன் தேர் இழுக்கப்பட்டது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.






      Dinamalar
      Follow us