sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா

/

திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா

திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா

திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா


ADDED : மே 04, 2024 01:43 AM

Google News

ADDED : மே 04, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 22ல் நடக்கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மே 21ல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரணை நடக்கிறது.

தொடர்ந்து, விசாக திருவிழாவான மே 22ல், அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மே 23ல் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us