sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

12 வயது சிறுமி பலாத்காரம்; இரு வாலிபர்களுக்கு 'கம்பி'

/

12 வயது சிறுமி பலாத்காரம்; இரு வாலிபர்களுக்கு 'கம்பி'

12 வயது சிறுமி பலாத்காரம்; இரு வாலிபர்களுக்கு 'கம்பி'

12 வயது சிறுமி பலாத்காரம்; இரு வாலிபர்களுக்கு 'கம்பி'


ADDED : ஜூலை 29, 2025 05:31 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்துார்; சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் இரு வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

துாத் துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 12 வயது சிறுமி அப்பகுதி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். சில நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. ஆசிரியைகள் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.

இதில், சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சில மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை இரண்டு வாலிபர்கள் தனித்தனியே மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி, தன் தாயுடன் திருச்செந்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை பலாத்காரம் செய்த அமலிநகர் பியோ காலனியை சேர்ந்த ரிசோ, 24, தெற்கு புதுதெருவை சேர்ந்த டி ராவிட், 24, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us