sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

காட்டில் பதுக்கிய 29 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஏப் 20, 2025 11:40 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.

கயத்தாறு, சவலாப்பேரி காட்டுப்பகுதியில், குடிசை அமைத்து ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு, அங்கு சோதனை செய்தனர்.

அப்போது, 29 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த மூட்டைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு பைக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கால்நடை தீவனங்களுக்காக அதிகளவில் கொண்டு செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்ததாக, சுற்று வட்டாரங்களை சேர்ந்த 33 முதல் 59 வயது வரையிலான ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us