sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

சாலையோரத்தில் நின்ற கார் மீது லாரி மோதல் திருச்செந்துார் சென்ற 3 பக்தர்கள் பலி

/

சாலையோரத்தில் நின்ற கார் மீது லாரி மோதல் திருச்செந்துார் சென்ற 3 பக்தர்கள் பலி

சாலையோரத்தில் நின்ற கார் மீது லாரி மோதல் திருச்செந்துார் சென்ற 3 பக்தர்கள் பலி

சாலையோரத்தில் நின்ற கார் மீது லாரி மோதல் திருச்செந்துார் சென்ற 3 பக்தர்கள் பலி


ADDED : டிச 26, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 26, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி, டிச. 26 -

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் பகுதியை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினீயர் விக்னேஷ், 31. இவர் தனது நண்பர்களான செல்வராஜ், 29, விஜயகுமார், 30, மகேஷ்குமார், 32, ராஜ்குமார் 32, ஆகியோருடன் திருச்செந்துார் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்துள்ளார்.

திருப்பூரில் இருந்து திருச்செந்துார் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு காரில் புறப்பட்டனர். செல்வராஜ் காரை ஓட்டினார். துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் நேற்று அதிகாலையில் அவர்கள் வந்ததும் ஓய்வுக்காக துாத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக காரை நிறுத்தினர்.

அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி கார் மீது மோதியதில் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மகேஷ்குமார் மற்றும் ராஜ்குமார் காயமடைந்தனர்.

மாசார்பட்டி போலீசார் காயமடைந்த இருவைரயும் மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தை விளாத்திகுளம் டி.எஸ்.பி., அசோகன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிய துாத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த முத்துகுமார், 35, என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us