sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

 டிராக்டரில் இருந்து விழுந்து 3 வயது சிறுவன் பலி

/

 டிராக்டரில் இருந்து விழுந்து 3 வயது சிறுவன் பலி

 டிராக்டரில் இருந்து விழுந்து 3 வயது சிறுவன் பலி

 டிராக்டரில் இருந்து விழுந்து 3 வயது சிறுவன் பலி


ADDED : நவ 22, 2025 12:17 AM

Google News

ADDED : நவ 22, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளாத்திகுளம்: டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே எம். துரைசாமிபுரம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் -- மாரீஸ்வரி தம்பதியின் மகன் நிதின் கிருஷ்ணன், 3. நேற்று முன்தினம் நுாறு நாள் வேலைக்குச் சென்ற போது, மாரீஸ்வரி தன் மகன் நிதின் கிருஷ்ணனை உடன் அழைத்து சென்றார்.

மரக்கன்றுகள் நடுவதற்காக பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 23, என்பவர் மரக்கன்றுகளை டிராக்டரில் கொண்டு வந்தார். அந்த டிராக்டரில் நிதின் கிருஷ்ணனை அமர வைத்து விட்டு மாரீஸ்வரி தனது வேலையை பார்க்கச் சென்றார்.

டிரைவர் செல்வம் அதை கவனிக்காமல் திடீரென டிராக்டரை இயக்கியதால், தவறி கீழே விழுந்த நிதின் கிருஷ்ணன் மீது டிராக்டரின் டயர் ஏறியதில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அந்த குழந்தையை மீட்டு, புதுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கிச் சென்றனர்.

ஆனால், வழியிலேயே சிறுவன் நிதின் கிருஷ்ணன் உயிரிழந்தார்.

டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் செல்வத்திடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us